Mannanalum thiruchenduril mannaven (TMS - Murugan devotional tamil Song)
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனி பூவானாலும் சரவணப்பொய்கை பூவவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ்விளக்க பேச்சாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ்விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன்
அருளால் முத்தாவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானலும் பஞ்சாமிர்தச் சுவையாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானலும் பஞ்சாமிர்தச் சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன் முருகா முருகா முருகா முருகா முருகா
Thanks for all your comments and if mistakes are there in this video please regret for any errors.
xkaruppan 2 months ago