Madam Kavinaya sings a song in a satirical form on Goddess .
ஆத்தான்னு கூப்பிட்டாக்க
ஆசையோட வந்திடுவா
அம்மான்னு கூப்பிட்டாக்க
அன்போட அருள்புரிவா
ஆத்திரமாப் பேசினாலும்
ஆதரவாக் கேட்டுக்குவா
அழுதழுது கெஞ்சினாக்க
ஆறுதலத் தந்திடுவா
ஆடிப்பாடிக் கூப்பிட்டாக்க
ஆனந்தமா வருவாயேன்னு
ஆடிப்பாடிக் கூப்பிட்டேனே
ஆத்தா ஒன்னக் காணலியே
தேடித்தேடிக் கூப்பிட்டாக்க
தெய்வமேநீ வருவாயேன்னு
தேடித் தவிச்சிருந்தேன்
தாயே ஒன்னக் காணலியே
கோடிக்கோடி உயிருக்கெல்லாம்
ஒத்தத்தாயி நீதானேடி
ஓடிவந்து என்னப்பாக்க
ஒருநொடியும் இல்லையோடி?
--கவிநயா
Link to this comment:
All Comments (0)