வள்ளி தாலாட்டு Lullaby for Valli

Loading...

Sign in or sign up now!
Alert icon
Upgrade to the latest Flash Player for improved playback performance. Upgrade now or more info.
931 views
Loading...
Alert icon
Sign in or sign up now!
Alert icon

Uploaded by on Jun 29, 2008

An age-old lullaby sung in praise of Goddess Valli.
வள்ளி என்றால் வள்ளி மலைமேல் படரும் வள்ளி
கொடியில் கிடந்த வள்ளி கூவி அழும்போது...

வனத்துக் குறவர்களாம் மான்பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல்கேட்டு குறவேடர் ஓடிவந்து
மதலை குரல்கேட்டு மான்வேடர் ஓடிவந்து
வாரியெடுத்து வண்ண மடியில் வைத்து
தூக்கியெடுத்து சொர்ண மடியில் வைத்து
மண்துடைத்து மடியில் வைத்து
வள்ளி என்ற பேருமிட்டு
வைத்தார் வனந்தனிலே...

உழக்குத் தினை விதைத்து வள்ளி உத்தமியை காவல் வைத்து
உத்தமியாள் காவலிலே ஓடிக் கிளிவிரட்டி
நாழி தினை விதைத்து வள்ளி நாயகியை காவல் வைத்து
நாயகியாள் காவலிலே நடந்து கிளிவிரட்டி
பதக்குத் தினை விதைத்து வள்ளி பசுங்கிளியை காவல் வைத்து
பசுங்கிளியாள் காவலிலே பாடி கிளிவிரட்டி
குறுணி தினை விதைத்து வள்ளி கொம்பனையாள் காவல் வைத்து
கொம்பனையாள் காவலிலே கூவி கிளிவிரட்டி
ஆலோலம் என்று சொல்லி வள்ளி அழகாய்க் கிளிவிரட்டி
எய்து கிளி விரட்டி வள்ளி இருந்தாள் பரண்மீது...

தினைப்புனமும் காத்து வள்ளி திகைத்து நிற்கும் வேளையிலே
வனத்திருக்கும் வேடரைப் போல் வந்தாராம் வேல்முருகர்
வண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்
கானக்குறவடிவேல் வள்ளி அழகுக்கும் வலதுகைத் தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா கண்டாசை கொண்டாரோ
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா உள்ளாசைப் பட்டாரோ
கூந்தலழகுக்கு சுப்பையா குறவேசம் ஆனாரோ

தேனும் தினைமாவும் தெவிட்டாத வேலவரும்
பாலுந் தினைமாவும் பசியாற வந்தாராம் வள்ளியிடம்
தாகம் எடுக்குதென்று சாலங்கள் செய்தாராம்
நல்ல கிழவனைப்போல் சுப்பையா நடித்தாராம் தினைப்புனத்தில்...

ஆனை கொண்டு வந்தார் சுப்பையா
வள்ளி ஆரணங்கை மாலையிட்டார்
சிகப்பு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி தேன்மொழியை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டார் சுப்பையா
வள்ளி பசுங்கிளையை மாலையிட்டார்
கிள்ளு வளையலிட்டார் சுப்பையா
வள்ளி கிளிமொழியை மாலையிட்டார்...

வண்டாடும் தோகைமலை
வள்ளியம்மை வாழும்மலை
கைலாசநாதர் மலை
மானென்றும் வள்ளி
மயிலென்றும் சுப்பையா
தேனென்றும் தெய்வயானை
தென்பழனி வேலவரே!

Because of time restrictions, I have attempted to sing only a portion of this lullaby in the raag THODI. I KNOW THAT YOU ALSO KNOW THAT I AM NOT A SINGER, BUT ONLY SETTING THE TUNE, LEAVING IT TO MORE QUALIFIED SINGERS TO SING THE SONG HENCEFORTH IN STYLE
ALL CREDIT GOES TO MADAM KAVINAYA
http://kavinaya.blogspot.com

Category:

Music

Tags:

License:

Standard YouTube License

  • likes, 0 dislikes

Link to this comment:

Share to:
see all

All Comments (0)

Sign In or Sign Up now to post a comment!
Loading...
Alert icon
0 / 00Unsaved Playlist Return to active list
    1. Your queue is empty. Add videos to your queue using this button:
      or sign in to load a different list.
    Loading...Loading...Saving...
    • Clear all videos from this list
    • Learn more