ஆறு
கவி மணி தேசிக விநாயகம் பிள்ளை
கல்லும் மலையும் குதித்து வந்தேன்
பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்
எல்லை விரிந்த சம வெளி எங்கும்
நானிறங்கி தவழ்ந்து தவழ்ந்து கடந்து வந்தேன்
கட்டும் அணை ஏறி சாடி வந்தேன் அதன்
கண்ணறை தோறும் நுளைந்து வந்தேன்
திட்டு திடர்களும் சுற்றி வந்தேன்
மடை சீப்புக்களும் மோதி திறந்து வந்தேன்
ஏறத மேடுகள் ஏறி வந்தேன் பல
ஏரி குளங்களும் நிரப்பி வந்தேன்
ஊறாத ஊற்றிலும் உட் புகுந்தேன்
மணல் ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன்
அல்லும் பகலும் அலைந்து வந்தேன் எங்கள்
ஆழி இறைவனை காண வந்தேண்
நில்லும் எனக்கினி நேரம் இல்லை
இன்னும் நீண்ட வழி போக வேன்டுமம்மா
This song was recorded in June 2008 for children's stage show.
Link to this comment:
All Comments (0)