Poetess Madam Kavinaya sings again.
http://ammanpaattu.blogspot.com
ஒரேயொரு வார்த்தை சொல்வாய்
என்னைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வாய்
பல நூறு ஜென்மங்கள்
எடுத்து வந்தேன் பார்த்துக் கொள்வாய்
(ஒரேயொரு)
பச்சைக் கிளி உனக்காக
பச்சைமர மாய்ப் பிறப்பேன்
பற்றிக் கொள்ளும் வெயிலினிலும்
பசும்நிழலை நான் கொடுப்பேன்
வஞ்சிக் கொடி உனக்காக
வண்ணமல ராய்ப் பிறப்பேன்
கொஞ்சிநீயும் நடை பழக
பாதை யெங்கும் பாய்விரிப்பேன்
(ஒரேயொரு)
குத்துவிளக்கா யிருந்தால்
கோதைமுகம் பார்த்திருப்பேன்
முத்துமணி மாலைகளாய்
மேனியினை அலங்கரிப்பேன்
கற்பூரமா யிருந்தால்
கருணை முகம் காட்டிடுவேன்
பொற்பதங்க ளைத்தழுவும்
நூபுரமாய்க் கிணுகிணுப்பேன்
அம்மாநீ உடன் இருந்தால்
துயர மெல்லாம் தூசாகும்
அம்மாஉன் துணை யிருந்தால்
பிறவி கூட பரிசாகும்
(ஒரேயொரு)
--கவிநயா
sung in Raag neelambari by Subbu thatha
Remember he only sets the tune, he is not a singer. Expects talented singers to sing in this raag.
Link to this comment:
All Comments (0)