A prayer song in the auspicious day of Tamil month Adi Friday, in glory and praise of MARIAMMAN. The song is written by Ms.kavinaya in her blog
http://kavinaya.blogspot.com
The song is aligned to to raag Chenchurutti
ஆடி வெள்ளிக் கெழமையிலே
பாடி உன்னத் துதிக்க வந்தோம்
ஆசையோட பொங்க வச்சு
பாசத்தோட படைக்க வந்தோம்
மாவெளக்கு ஏத்தி வச்சோம்
மாரியாத்தா மனங் குளிர
மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம்
மங்கை உந்தன் மனம் மகிழ
தீராத வெனை யெல்லாம்
உன்னக் கண்டா தீருமடி
மாறாத வெனை யெல்லாம்
மருண் டோடி மறையுமடி
தேடி வரும் வெனை தெகைச்சு
திரும்பி ஓடுமடி
பாடி உன்னச் சரணடைஞ்சா
பாவமெல்லாங் கரையுமடி
உன்னடியே கதியின்னு
ஓடோடி வந்தோமடி
பொன்னடியே புகலுன்னு
பணிஞ்சு நின்னோமடி!
Link to this comment:
All Comments (0)