http://www.facebook.com/pages/pairau-tirumuaika-tevaram-tiruvacakam-tirumanti...
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்!குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்!
ஆள் இலை; எம்பெருமான், அவை அட்டித்தரப் பணியே!
வண்டுஅமரும்குழலாள் உமைநங்கை ஓர்பங்கு உடையாய்!
விண்டடவர்தம் புரம்மூன்று எரிசெய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக் கோளிலி எம்பெருமான்!
அண்டம்அதுஆயவனே, அவை அட்டித்தரப் பணியே!
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்; படரும் சடைக் கங்கை வைத்தாய்;
மாதர்நல்லார் வருத்தம்(ம்)அது நீயும் அறிதி அன்றே!
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்;
ஆதியே, அற்புதனே, அவை அட்டிதரப் பணியே!
Link to this comment:
All Comments (0)