இன்றும் சூரியன் மறைந்து விட்டது;
இன்னொரு நாளும் முடிந்து விட்டது...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!
பொழுதும் போகுது புவியும் சுற்றுது;
பிறவியும் நீளுது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!
காலம் கடக்குது நேரம் பறக்குது;
கொடுவினை சேருது தினந்தினமே...
இன்றென்ன செய்தாய் என்மனமே?
கன்றெனக் கரைவாய் அவளிடமே!
நாளும் கோளும் உனக்காக
காத்திருக்காது எப்போதும்...
வேளை வந்துன்னைச் சேரும் முன்னே
விரைந்தே பற்றிடு அவள் பதமே!
--கவிநயா
Link to this comment:
All Comments (0)