Tamil Nadu Police showed their cruel face by arresting the human rights activists who were protecting the dead body of Santhavel who was killed brutally by Malaylee Thugs in Kerala. Later the police forcibly took away the dead body of Santhavel and cremated the body without the permission of the family members.
இன்று ஏவல் (காவல் ) துறையின் அராஜகம் உச்ச கட்டம். இறந்து போன சாந்தவேலுக்கு நீதி கேட்டு அனைத்து தமிழுணர்வு கட்சிகளும் இணைந்து போராடின. அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு கோரிக்கையும் இந்த அரசு ஏற்கவில்லை . அரசு வாயே திறக்க வில்லை . மாறாக தன்னுடைய ஏவல் துறையை பயன்படுத்தி குண்டுக் கட்டாக அனைத்து கட்சித் தலைவர்களையும் , தமிழ் உணர்வாளர்களையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது . பின்பு காவல் துறை அந்த இறந்தவர் குடும்பத்தை இழுத்து போட்டு விட்டு சாந்தவேலுவின் சடலத்தை ஒரு அவசர ஊர்தியில் ஏற்றி அவர்களே எரித்து விட்டனர். தமிழக வரலாற்றிலேயே இப்படி பிணத்தை பிடுங்கிப் போய் சொல்லாமல் கொள்ளாமல் எரிப்பது இதுவே முதல் முறை போல் தெரிகிறது.
தோழர் பண்ருட்டி வேல்முருகனின் பணி மிகவும் பாராட்டுக் குறியது. இறுதி வரை போராட்டக் களத்தில் இருந்து தமிழர்களின் கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தார் . சாந்தவேலுவின் குடும்பத்திற்கு நியாயம் வேண்டி காவல் துறையிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இறுதியில் காவல் துறை மிக கேவலமாக நடந்து கொண்ட பிறகு , இனி தமிழக அரசின் எந்த ஒரு உதவியும் இறந்தவரின் குடும்பத்திற்கு வேண்டாம் என்று கூறி, தானே முன் வந்து ஒரு லட்ச ரூபாயும், மற்ற அமைபினரிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாயும் வாங்கி சாந்தவேலுவின் குடும்பத்திற்கு தருவதாக உறுதி அளித்தார். தமிழ் உணர்வாளர்கள், அமைப்புகள் அனைவரும் இந்த குடும்பத்திற்கு உதவ முன் வர வேண்டும் என கோரிக்கை வைத்தார். நாம் அனைவரும் நிதி திரட்டி இந்த குடும்பத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் . இப்படி அராஜகம் செய்த தமிழக அரசையும் , காவல் துறையையும் வன்மையாக தமிழ் உணர்வாளர்கள் கண்டிக்கின்றோம்.
கேரள அரசுக்கு அடிமை வேலை பார்க்கும் தமிழக காவல்துறை ஒழிக!!!
corpmadu 1 month ago 5
Tamil Nadu police = BARBARIAN mercenaries
arun1paladin 1 month ago 3