Song about the specialty of Maruvathur Omsakthi SOOLAM.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரைப் பௌர்ணமி விழாவை முன்னிட்டு, 08.05.09 மதியம் ஒரு மாபெரும் கலச விளக்கு வேள்வி பூசையை பங்காரு அடிகளார் நடத்தினார். 1008 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த வேள்வியில் பங்காரு அடிகளாரின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சித்தர் பீட வளாகத்தின் உள்ளே நுழைந்தால் ஒரு நாகபோகத்தினுள் நுழையும் உணர்வு ஏற்பட்டது. ஒரு தலை நாக யாக குண்டங்களும், இரு தலை நாக யாக குண்டங்களும் ஏராளமான அளவில் அமைக்கப்பட்டிருந்தன. சித்தர் பீட உள்பிரகாரம் முழுவதும் திரிசூல வடிவிலான யாக குண்டங்களும், குரு சக்கரம், நவகிரக சக்கரம், உலகச் சக்கரம், காளிச்சக்கர யாக குண்டம் மற்றும் சதுர, வட்ட, ஐங்கோண, அறுகோண, எண்கோண, டைமண்ட் வடிவிலான யாக குண்டம் முதலியவையும் அமைக்கப்பட்டிருந்தன. சக்கரங்களின் மேல் 702 ராஜ ராஜேஸ்வரி கலசங்களும் 10008 கலசங்களும், 10008 விளக்குகளும் வெவ்வேறு சக்கர வடிவங்களில் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
very nice song....
ssat6 2 years ago
Vamana avatara says thank you for the view and the song, i can only say namascar.
sacalante 2 years ago