அதே போல் ஆரம்பத்தில் தான் இசையமைத்த “மஞ்சள் நிலாவுக்கு” என்னும் பாடலில் , ரயிலின் வேகத்திற்கு ஈடாக ட்ரம்ஸ்-இன் சிம்பலையும் ரிதம் கிடாரையும் ஓட விடுவது அனைவரும் கையாளும் முறை என்பதால், அதற்கு மேல் சுசீலா போன்ற ஒரு மூத்த பாடகியை ரயிலின் ஒலிப்பானைப் போல பாட வைத்தது ஒரு புது வகை முயற்சியே.
காதலன்’ படத்தின் நடனப் பாடல் “முக்காலா முக்காபுலா” அளவுக்கு வெகுஜனப்
புகழடைந்த வேறொரு பாடல் இக்காலகட்டத்தில் வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.வெகுஜன ரசனைக்கான
‘முக்காலா முக்காபுலா’வை ஸ்வர்ணலதா பாடியிருக்கும் விதம் அலாதியானது. “பதில் நீ
சொல்லு காதலா..” போன்ற வரிகளை அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு ...