எங்கள் தாயகத்தில் எரியும்பார் விரைவில் நெற்றி மீது விழுகின்ற முடியுயர்த்தி- எங்கள் தலைவன் தன் நெற்றிக் கண்ணை திறக்கின்றான்-அதில் கொழுந்து விட்டெரியும் எங்கள் வீரர்களின் விடுதலை வேட்கை கொழும்பில் சுடுகின்றதாம்..
படை நடுத்தும் பகைவன் தளபதிக்கு நடுக்கம் வடையின் ஓட்டை வழிகூட வரிப்புலி நுழையுமென்று பிதற்றுகின்றான் ஏதோதோ சிறுபிள்ளை போல தடைகள் வைத்து அவர் புலி தேட --பகைவன் தடைகள் தாண்டியவர் மடியில் வெடி வைத்து விளையாடுதெங்கள் வீரப்புலிகள்.
கடலில் தடைபோடும் பகை அதை தவிடுபொடியாக்கி தாவிக்குதித்து அங்கு பாய்ந்து பகைகொல்லும் கடற்புலிகள் நீரில் வாழும் புலி நிலத்தில் நடக்கும் புலி வானில் பறக்கும் புலி எந்தப் புலிக்கு நீ பதில் சொல்வாய் பகையே? நிலத்தை பார் கடலைப்பார் வானைப்பார் வருகின்றது எங்கள் வரிப்புலிகள் எரிப்பதற்கு உன்னை.
இழப்புக்கள் கண்டு எம் புலிகள் இடிந்து போயிருந்தால் இந் நேரம் அவர்கள் மடிந்திருப்பார்கள்- எம்வீரர்கள் விழுவதெல்லாம் மீண்டும் விதையாகி முளைப்பதற்கே பொறுத்திரு பகையே பொறிபறக்கும் உன்கண்களிலே கறுத்த நிறத்தில் சிலர் காத்திருக்கின்றார் உன்வாசல் வந்து உன் கழுத்தறுக்க
முடிந்தால் முயற்சித்துப்பார் உன் முற்றத்தில் வெடிக்கிக்கின்ற வெடி தவிர்க்க -- சிங்கத்தின் கோட்டைக்குள் சில புலிகள் சிம்பிளாய் தரிகின்றதாம் ஆனால் சினத்தோடிருக்கின்றதாம் கவனம் வான் வழிவந்தெங்கள் வதிவிடம் அழிக்கின்றாய்...எங்கள் வாழ்வதனை தொலைக்கின்றாய்....உந்தன் கோட்டைக்குள் குறிவைத்தால் கோழைத்தனம் என்கின்றாய்.. கேள் பகையே
சிறு பிள்ளை கூட உனை விரட்ட துணியும்பார் அப்போது உன்படைகள் அடிபணியும்பார் தமிழன் தாயகக் கனவிங்கு பலிக்கும்பார் -எங்கள் தனிநாடு வேட்கையன்று தணியும்பார் - அக்காலம் விரைவில் கனியும்பார் -அப்போது தமிழீழம் வெற்றிவாகை அணியும்பார்