8 மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே! அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே! கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே! சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ! 10 தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
This has been flagged as spam show
submadkicdar 1 year ago
தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
submadkicdar 1 year ago
This has been flagged as spam show
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!
submadkicdar 1 year ago
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
submadkicdar 1 year ago